பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடிதமொன்று கிடைத்துள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் , இது குறித்து எமது செய்திச் சேவை மேற்படி உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் அவர்களுக்கு தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு வினவியிருந்தது.
எனினும் , அவ்வாறான எந்த கடிதமும் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.