தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக இன்று மே தினம் உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகின்றது.
18ஆம் நூற்றாண்டு காலப்பகுதயில் 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டமைக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியே மேதின உருவாக்கத்தின் ஆரம்பமாக இருந்தது.
குறிப்பாக இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் இதில் முக்கிய பங்கினை வகித்தது.
சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போரட்டங்களை நடத்தியது.
அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
அதேநேரம், 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர்.
இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.
1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
1856இல் ஆவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.
இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
ரஷ்யாவை ஆட்சி செய்த சார் மன்னரால் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள்.
இங்கும் 1895 – 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.
1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டிருந்தது.
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர்.
அதேபோல்இ 1835இல் பிலடெல்பியாவிலும்இ பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு’என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.
இந்த இயக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது.
1886ஆம் ஆண்டு மே முதலாம் திகதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.
இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க்இ சிகாகோஇ பிலடெல்பியாஇ மில்விக்கிஇ சின்சினாட்டிஇ பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3, 50, 000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது.
இந்தவேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்காவின் பல நிறுவனங்கள் மூடப்பட்டன.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது.
மிச்சிகனில் மட்டும் 40, 000 தொழிலாளர்களும்இ சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
மே 3, 1886ஆம் ஆண்டு சிக்காக்கோவில் நடபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது.
இதன் போது கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்றம்; கூடியது.
இதில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இதுவே பின்னர் மே ஒன்று தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, பாதுகாப்பு காரணங்களால் இந்த முறை மே தின கூட்டங்களை நடத்தாதிருக்க பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக்கல்லூரியில் நினைவு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.
இதுதவிர, ஜே.வீ.பி தமது கட்சி தலைமையகத்தில் நினைவு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.
இதேவேளைஇ ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பத்தரமுல்லையில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் மே தினத்தை கொண்டாடவுள்ளது.
இதனிடையே, இன்றைய மே தினத்தை பிரார்த்தனை மற்றும் அஞ்லி நிகழ்வாக நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தீர்மானித்துள்ளன.