தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு வழிநடத்தல்களை மேற்கொண்ட மொஹமட் ஃபரூக் மொஹமட் ஃபவாஸை 72 மணி நேரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாழைத்தோட்டம் பகுதியில் அடுக்குமாடி வீடொன்றில் அவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது அவரிடமிருந்து அந்த அமைப்பிற்கு சொந்தமான பொருட்கள் சிலவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தன.
சம்மாந்துறை , கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளுக்கு காலை 8 மணியுடன் ஊரடங்கு சட்டம் நீக்கம்