மேலும் இருவர் கைது

தற்கொலை அங்கியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பல பொருட்கள் மீட்பு..

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அம்பாறை – நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு உருண்டைகள் பொருத்தப்பட்ட தகடுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது இவை மீட்கப்பட்டன.

இதேவேளை, திருகோணமலை – நிலாவெளி – இரக்ககண்டி பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

உந்துருளியில் பயணித்த ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய போது இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதன்போது 8 ஜெலட் நைட் குச்சிகள், 160 டெடனேட்டர்கள் மற்றும் திரி நூல் என்பன மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கமைய, அந்த பகுதியிலுள்ள கடற்பிராந்தியத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நவடிக்கையின் போது 43 ஜெலனட்நைட் குச்சிகள் மற்றும் 55 டெடனேட்டர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மாத்தளை – கோபிலிவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 9 மில்லி மீற்றர் ரகத்தை சேர்ந்த 7 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்த பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகாமையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மஸ்கெலியா பள்ளிவாசல் ஒன்றில் இருந்து 49 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா நகரில் காவற்துறையினர் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பள்ளிவாசலில் உள்ள களஞ்சியசாலையில் இருந்தே குறித்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் நாளைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …