முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நேற்ற கையளித்தார்.
குறித்த அறிக்கை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, குறித்த அறிக்கையை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் விமானப் படை தளபதி ரொஷான் குணதிலக்க, முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் வசந்த கரன்னாகொட, எட்மிரல் ஜயநாத் கொழம்பகே, முன்னாள் காவல்துறை அதிபர்களான மஹிந்த பாலசூரிய, சந்ரா பெர்ணான்டோ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும், குறித்து தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.