எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள விவாதத்திற்கான நேரத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பபட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக சுற்றுலாத்துறை உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டிள்ளார்.
இந்தநிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 5.30 முதல் 7.30 வரை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த விவாதத்தை பிற்பகல் 1 மணி முதல் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த கடிதம் அனுப்பபட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
பயணிகளின்றி காட்சி தரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்…!