தேவையற்ற வதந்திகளாலும் தவறான தொலைபேசி அழைப்பினாலும் ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
தற்போதைய நிலைமை குறித்து சரியான தகவல்களை பாதுகாப்பு பிரிவினர் வழங்கி வருவதாக அதன் பணிப்பாளர் நாலக கலுவெவ மேலும் தெரிவித்தார்.
இதேவேளை , கிடைக்கும் தகவல்களுக்கு அமைய வீதிகளை மூடி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் மற்றும் புறநகர் பகுதிகளில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக தேவையற்ற பயத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு காவற்துறை ஊடக பேச்சாளர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.