2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின், அச்சுறுத்தல் விடுப்போரின் தொழில்வாய்ப்பு பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவரான நீதியரசர் உபாலி அபேரத்ன இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக் புற்றுநோய் தடுப்பு ஊசிகளைப் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட மோசடி குறித்து பெண் மருத்துவர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதன் காரணமாக, உயர்மட்ட அதிகாரிகளினால், அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிலைக்கு தான் ஆளாகியுள்ளதாக குறித்த பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே ஆணைக்குழுத் தலைவர் குறித்த எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளார்.